டெல்லியில், காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் நடைபெற்று வருகிறது

டெல்லியில் காவிரி ஒழுங்காற்று குழுவின் ஆலோசனை கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது.

காவிரி ஒழுங்காற்று குழுத் தலைவர் நவீன்குமார் தலைமையிலான இந்த ஆலோசனை கூட்டத்தில், 4 மாநில அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். அணையின் நீர் இருப்பு குறித்த தகவலை, தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட 4 மாநில அதிகாரிகள் தாக்கல் செய்கின்றனர். ஒவ்வொரு மாதமும் வழக்கமாக நடைபெறும் இந்த கூட்டத்தில், தமிழகம், கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி மாநில அதிகாரிகள் பங்கேற்பர். அண்மையில் கர்நாடகாவில் நல்ல மழை பொழிந்து, அணைகளின் நீர் மட்டம் உயர்ந்துள்ள நிலையில், தற்போது நடைபெற்று வரும் ஒழுங்காற்றுக் குழு ஆலோசனை கூட்டத்தில், தமிழகத்திற்கு தேவையான நீரை திறந்துவிட கர்நாடகாவிற்கு அறிவுறுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version