குற்றாலத்தில், சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்துள்ளது – வியாபாரிகள் கவலை

குற்றாலம் மற்றும் ஐந்தருவியின் ஐந்து கிளைகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

நெல்லை மாவட்டத்திலுள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில், கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருவதால், மாவட்டம் முழுவதிலும் உள்ள நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. கனமழை காரணமாக குற்றாலம் மற்றும் ஐந்தருவியின் ஐந்து கிளைகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஐந்தருவியில் தண்ணீர் வரத்து அதிக அளவு காணப்பட்டாலும், சுற்றுலா பயணிகள் வருகை சற்று குறைவாகவே உள்ளதாக அப்பகுதி வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

Exit mobile version