கோவையில் போதை பொருட்கள் விற்றதாக 4 பேர் கைது

கோவை மாவட்டம் குனியமுத்தூரில் உள்ள ஜே. ஜே நகர் பகுதியில் போதை மாத்திரைகள் வைத்திருந்த இருவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்ட போது அற்புதராஜ், தாமோதரன் ஆகிய இரண்டு வாலிபர்கள் சந்தேகத்திற்கிடமான முறையில் சுற்றிக் கொண்டிருந்தனர். அவர்களை  பிடித்து விசாரித்ததில், போதை மாத்திரைகள் வைத்திருப்பது தெரிய வந்தது.இதேபோன்று, சரவணம்பட்டி பகுதியில், 5 பேர் கொண்ட கும்பலிடம் கஞ்சா பொருட்கள் இருப்பது தெரிய வந்தது. அவர்களிடம் காவல் துறையினர் விசாரிக்க சென்றபோது 3 பேர் தப்பியோடினர். வல்லரசு, ராஜா ஆகிய 2 பேரிடம் இருந்து 1 கிலோ கஞ்சா மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

Exit mobile version