கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

அடுத்த 48 மணி நேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுவை கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் புவியரசன் கூறியுள்ளார். கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை, ராமநாதபுரம், குமரி கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்தார்.

Exit mobile version