குடும்ப தகராறில் மனைவி திரும்பி வராததால் மனமுடைந்த கணவர் தூக்கிட்டு தற்கொலை

சென்னை அனகாபுத்தூரில், கோபித்துகொண்டு தாய் வீட்டிற்கு சென்ற மனைவி திரும்பி வராததால், கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பொதுமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது….

சென்னை அனகாபுத்தூரில் உள்ள சாய் நகரைச் சேர்ந்த முருகமணி என்பவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே கடந்த வாரம் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் கோபித்துகொண்ட மனைவி வந்தவாசியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று
விட்டார். தாய்வீட்டிற்கு சென்ற மனைவி திரும்பி வராததால் மனமுடைந்த முருகமணி, இரு தினங்களுக்கு முன் தன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்நிலையில், இன்று பூட்டி இருந்த அவரது வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த முருகமணியின் மகன், தனது தந்தை தூக்கில் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து, தகவலறிந்து வந்த சங்கர் நகர் காவல்துறையினர் முருகமணியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Exit mobile version