கார் பந்தயத்தில் சென்னையை சேர்ந்த விஷ்ணு பிரசாத் முதலிடம்

கோவை மாவட்டம் செட்டிபாளையத்தில் நடைபெற்ற கார் பந்தயத்தில் சென்னையை சேர்ந்த விஷ்ணு பிரசாத் முதலிடம் பிடித்துள்ளார்.

தனியார் நிறுவனம் சார்பில் 22-வது தேசிய அளவிலான கார் பந்தயம் நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடைபெற்ற போட்டியில் தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து ஏராளமான வீரர்கள் கலந்து கொண்டனர். விறுவிறுப்பாக நடந்த இறுதி போட்டியில் சென்னையை சேர்ந்த விஷ்ணு பிரசாத் 68 புள்ளிகள் பெற்று கோப்பையை கைப்பற்றினர். 63 புள்ளிகள் பெற்று ராகுல் ரங்கசாமி இரண்டாவது இடத்தை பெற்றார்.

Exit mobile version