கலிபோர்னியாவில் தீப்பற்றி எரிந்ததில் படகில் பயணம் செய்த 34 பேரும் உயிரிழந்தனர்

கலிபோர்னியாவில் சுற்றுலாப் படகு தீப்பற்றி எரிந்ததில் படகில் பயணம் செய்த 34 பேரும் உயிரிழந்தனர். படகு தீப்பிடித்து எரியும் காட்சிகளும் வெளியாகியுள்ளன.

தெற்கு கலிபோர்னியா அருகே சாந்தாகுரூஸ்((Santa Cruz)) தீவில் ஆழ்கடல் நீச்சல் நிகழ்ச்சி மூன்று நாட்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் பங்கேற்பதற்காக ஏற்பாட்டாளர்கள் 6 பேருடன் சுற்றுலாப் பயணிகள் 33 பேர் படகில் பயணம் மேற்கொண்டிருந்தனர். இந்த நிலையில் கரையோரம் நிறுத்தப்பட்டிருந்த அவர்களின் படகு நள்ளிரவு திடீரெனத் தீப்பற்றி எரியத் தொடங்கியது. இந்த விபத்தில் ஊழியர்கள் 5 பேர் கடலில் குதித்து உயிர்தப்பிய நிலையில், மீதமுள்ள 34பேரும் இறந்து விட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடுக்கடலில் படகு தீப்பிடித்து எரிந்த கடைசி நிமிடக் காட்சிகள் தற்போது வெளியாகி இணையத்தில் பரவி வருகின்றன.

Exit mobile version