புத்காமில் தீவிரவாதிகள் – ராணுவத்தினர் துப்பாக்கிச்சூடு

ஜம்மு காஷ்மீரின் புத்காமில் பாதுகாப்புப் படையினர் மற்றும் தீவிரவாதிகளுக்கிடையில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில், 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். புத்காம் மாவட்டத்தின் சுட்சூ பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியுள்ளதாக கிடைத்த தகவலையடுத்து அப்பகுதியில் பாதுகாப்புப் படையினர், ராணுவத்தினர் மற்றும் போலீசார் கூட்டு சோதனையில் ஈடுபட்டனர். இதையடுத்து தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டனர். கூட்டுப் படையினரும் எதிர்தாக்குதலில் ஈடுபட்டனர்.

இந்த துப்பாக்கிச்சூட்டில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் தீவிரவாதிகளின் தாக்குதலில் 4 ராணுவத்தினர் காயமடைந்ததாக ராணுவ வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. அந்தப் பகுதியில் தீவிரவாதிகளின் ஆயுதங்களை பறிமுதல் செய்துள்ள கூட்டுப் படையினர், தொடர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

Exit mobile version