அமெரிக்காவில் , கழுத்தில் மண்டியிட்டு அழுத்தியதில் கருப்பின மனிதர் உயிரிழப்பு!

அமெரிக்காவில், காவல் அதிகாரி கழுத்தில் அழுத்தியதில் கருப்பின மனிதர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்திலுள்ள மினியாப்பொலிஸ் என்ற நகரில், ஜார்ஜ் ஃபிலாய்ட் என்ற கருப்பி மனிதரின் மீது காவல் அதிகாரி ஒருவர், 5 நிமிடமாக கழுத்தில் மண்டியிட்டு அழுத்திய வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. மூச்சு விட முடியவில்லை என்று அந்த நபர் கெஞ்சியும், கழுத்திலிருந்து இருந்து காலை அந்த காவல் அதிகாரி எடுக்காததால் ஜார்ஜ் ஃபிலாய்ட் மூச்சு விடுவதில் சிரமம் அடைந்தார். இந்த நிலையில், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஜார்ஜ் ஃபிலாய்ட் பரிதாபமாக உயிரிழந்தார். இன வெறி தாக்குதல் போன்று நடந்த இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள மினியாப்பொலிஸ் மேயர் ஜேக்கப் ஃப்ரே, கருப்பின மனிதர் உயிரிழந்த தொடர்பாக FBI விசாரணையை தொடங்கியுள்ளதாகவும், நான்கு காவல் அதிகாரிகளும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Exit mobile version