நூதன முறையில் தொடர்ந்து மணல் கொள்ளை

வாணியம்பாடி அருகே பாலாற்றில் சுரங்கங்கள் போன்று குழிகள் தோண்டி இருசக்கர வாகனம் மூலம் நூதன முறையில் தொடர்ந்து  மணல் கொள்ளையானது நடைப்பெற்றுக் கொண்டிருக்கிறது. இதனை தடுக்க நடைவடிக்கை எடுக்குமாறு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பத்தூர்  மாவட்டம் வாணியம்பாடியிலுள்ள, சென்னாம்பேட்டை, ஜாப்ராபாத், மேட்டுப்பாளையம் போன்ற பகுதிகளில் உள்ள   பாலாற்றின் படுகையில் சுரங்கங்கள் போன்று குழிகள் அமைக்கப்பட்டு, தினமும் மணல் அள்ளப்படுவதாகவும், இதனால் நிலத்தடி நீர் மட்டம் முற்றிலுமாக பாதிக்கப்படுவதாகவும் சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர். எனவே மணல் கொள்ளையை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version