சட்ட விதிகளுக்கு உட்பட்டே, சசிகலாவிடம் விசாரணை செய்ய வேண்டும் : பொன்னையன்

சட்ட விதிகளுக்கு உட்பட்டே, ஆணையம் சசிகலாவிடம் விசாரணை செய்ய வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் தெரிவித்துள்ளார். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.

இந்த ஆணையத்தில் முன்னாள் அமைச்சர் பொன்னையன் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்ததார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆணையம் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்ததுடன், ஆதாரங்களையும் கொடுத்துள்ளதாக கூறினார். மேலும் சட்ட விதிகளுக்குட்பட்டே ஆணையம் சசிகலாவிடம் விசாரணை நடத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Exit mobile version