பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 3 பேர் உயிரிழப்பு

ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 3 பேர் உயிரிழந்தனர்.

இந்தியா பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வரும் நிலையில், பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தின் கிருஷ்ணா காதி பகுதியில் உள்ள எல்லை கட்டுபாட்டு கோடு அருகே பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் அப்பகுதியை சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்ததுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், இத்தாக்குதலில் மூன்று வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version