கரூர் சிறப்பு குறைதீர் முகாமில் ரூ.98 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கல்

கரூரில், முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்டத்தின் கீழ், நடைபெற்ற நலத்திட்டங்கள் வழங்கும் விழாவில், சுமார் 98 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழங்கினார்.

கரூரில் உள்ள திருவள்ளுவர் மைதானத்தில், மாவட்ட ஆட்சியர் அன்பழகன் தலைமையில் பிரமாண்ட விழா நடைபெற்றது. இதில், தேசிய முதியோர், விதவைகள், கணவரால் கைவிடப்பட்டவர்களுக்கான உதவித் தொகை, மாற்று திறனாளிகள் உதவித் தொகை, கருணை அடிப்படையில் பணி நியமனம், சலவைப் பெட்டி, தையல் இயந்திரங்கள், டிராக்டர்கள் வழங்குதல் என, 2 ஆயிரத்து 757 பயனாளிகளுக்கு, சுமார் 98 கோடி ரூபாய் மதிப்பிலான நலத் திட்டங்களை, போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழங்கினார். விழாவில், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் கீதா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன், திட்ட அலுவலர் கவிதா மற்றும் கரூர் ஒன்றியத்திற்குட்பட்ட பயனாளிகள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Exit mobile version