புல்வாமாவில் வாக்குச்சாவடி ஒன்றில் மர்மநபர்கள் கையெறிகுண்டு வீசி தாக்குதல்

காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் வாக்குச்சாவடி ஒன்றில் கையெறி குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நாடு முழுவதும் மக்களவை தேர்தலுக்கான 5ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் ராமு கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி ஒன்றில் கையெறி குண்டு வீசி மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தினர். இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். 

இந்நிலையில் மேற்குவங்கத்தில் ஹூக்ளி மாவட்ட பாஜக தலைவர் பிரணாப் மோண்டல் சகா தாக்கப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் தன்னை தாக்கியதாக அவர் குற்றம் சாட்டி உள்ளார். வாக்காளர்களை வாக்களிக்க விடாமல் திரிணாமுல் காங்கிரஸ் குண்டர்கள் தடுப்பதாகவும் அவர் கண்டனம் தெரிவித்துள்ளார். 

Exit mobile version