ஒரு நிமிடத்தில், ஆறு இட்லி. அசத்திய 60 வயது பெண்மணி..!

தசரா திருவிழாவை முன்னிட்டு கர்நாடகா மாநிலத்தில் நடந்த இட்லி சாப்பிடும் போட்டியில், 60 வயதுடைய பெண்மணி முதல் பரிசை பெற்றார்.

இந்தியா முழுவதும், தசரா திருவிழா அக்டோபர் 8ஆம் தேதி ஒவ்வொரு வருடமும் பல நிகழ்ச்சிகளோடு கோலாகலமாக கொண்டாடப்படும். இத்திருவிழாவை முன்னிட்டு, கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள பெண்களுக்கு இட்லி உண்ணும் போட்டி ஒன்று நடைபெற்றது. இந்த போட்டியில் யார் வேண்டும் என்றாலும் வயது வரம்பின்றி கலந்து கொள்ளலாம் என்றதும், ஏராளமான பெண்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

இந்த போட்டியில் கால அளவு ஒரு நிமிடமாக விழாக்குழு நிர்ணயித்து நடத்தபட்டது. இந்த போட்டியில் இட்லிக்கு சாம்பாரும் வழங்கப்பட்டது. இந்நிலையில், பந்தயம் தொடங்கியதும் விறுவிறுப்பாக திக்குமுக்காடி அனைவரும் இட்லியை சாப்பிட ஆரம்பித்தனர். ஆனால், 60 வயதான சரோஜம், ஒரே நிமிடத்தில் 6 இட்லிகளை சாப்பிட்டு எல்லாரையும் ஆச்சர்யத்தில் உறைய வைத்துள்ளார். பின்பு, இப்போட்டியில் வெற்றி பெற்று, முதல் பரிசையும் தட்டிச் சென்றார்.

Exit mobile version