ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறப்போவதாக இம்ரான் தாகிர் அறிவிப்பு

தென் ஆப்ரிக்கா சுழல் பந்துவீச்சாளர் இம்ரான் தாகிர் உலகக்கோப்பை தொடருடன் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

பாகிஸ்தானின் லாகூரில் பிறந்த 39 வயதான இம்ரான் தாகிர் தென் ஆப்ரிக்காவுக்காக விளையாடி வருகின்றார்.

இதுவரை 20 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 57 விக்கெட்டுகளும், 95 ஒருநாள் போட்டிகளில் 156 விக்கெட்டுகளும், 37 டி20 போட்டிகளில் 62, 38 ஐபிஎல் போட்டிகளில் 53 விக்கெட்டுகளும் வீழ்த்தி இன்டரஹ வயதிலும் தன் திறமையை நிருபித்து வருகிறார்.

இந்நிலையில் வரும் உலகக் கோப்பை தொடருடன் தான் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாக திடீரென அறிவித்துள்ளார். அவரின் இந்த முடிவுக்கு விளக்கம் அளித்துள்ளார். அணியில் இளம் சுழல் பந்துவீச்சாளர்களுக்கு வழிவிடும் வகையில் தான் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

மற்றபடி ஐபிஎல் உள்ளிட்ட உள்ளூர் டி20 கிரிக்கெட் தொடர்களில் விளையாட விரும்புவதாக தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடரில் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version