காரைக்குடியில் நகைக்கடை வருமானவரி சோதனையில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் உள்ள பிரபல நகைக் கடையில் வருமான வரித்துறையினர் 19 மணி நேரமாக நடத்திய சோதனையில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அம்மன் சன்னதியில் உள்ள MSP சேதுராமன் & சன்ஸ் நகைக்கடையில்  நேற்று மாலை 4 மணி அளவில் வருமானவரி இணை இயக்குனர் பத்மாவதி தலமையிலான 13 பேர் கொண்ட  அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

தொடர்ந்து சோதனையானது அவர்களது 2 வீட்டிலும் நடைபெற்றது. இன்று காலை 11.30 மணி அளவில் சோதனை முடிவு பெற்ற நிலையில் 4 பைகள் நிறைய முக்கிய ஆவணங்கள் சிக்கியது . 9 மணி நேரமாக வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கை பற்றிய ஆவணங்களை வருமான வரித்துறையினர் எடுத்து சென்றனர்.

Exit mobile version