நீட் தேர்வு ஆள்மாறாட்டம் வழக்கில் மேலும் ஒரு மாணவனிடம் விசாரணை

நீட் தேர்வு ஆள்மாறாட்டம் வழக்கில் மேலும் ஒரு மாணவனிடம் சிபிசிஐடி காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததற்கான அறிகுறிகள் இருந்ததால், எஸ்.ஆர்.எம்.கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வரும் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த பவித்ரன் என்ற மாணவரிடம் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தேனி சிபிசிஐடி அலுவலகத்தில் மாணவன் பவித்ரனிடம் சிபிசிஐடி அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முடிந்த பிறகே, ஆள்மாறாட்டம் குறித்து உண்மைத் தகவல் வெளியாகும் என சிபிசிஐடி அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version