ஐம்பொன் சிலையை வீட்டில் பதுக்கிய நபர் கைது

சேலம் கெங்கவல்லியில் 5 கோடி ரூபாய் மதிப்பிலான ஐம்பொன் சிலைகளை கடத்தியவர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்…

ராஜசேகர் என்பவரது வீட்டில், ஐம்பொன் சிலை பதுக்கி வைத்திருப்பதாக சிலை கடத்தல் பிரிவு காவல் துறையினருக்கு தகவல் கிடைத்ததன் அடிப்படையில், அங்கு சென்று சோதனையிட்ட காவல் துறையினர், அங்கிருந்த ஒன்றரை அடி உயரம் உடைய 6.5 கிலோ எடை கொண்ட பஞ்சலோக அம்மன் சிலையை கண்டுபிடித்தனர். இதனையடுத்து அவரிடமிருந்து, சிலையை பறிமுதல் செய்த காவல் துறையினர் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், ஐம்பொன் சிலையை 5 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய இருந்தது தெரிய வந்தது. மேலும் இந்த கடத்தலில் யார், யாருக்கெல்லாம் தொடர்புள்ளது என தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Exit mobile version