பார்வையற்ற இளைஞருக்கு இமான் கொடுத்த இன்ப அதிர்ச்சி..

சமூகவலைத்தளத்தில் பார்வையை இழந்த இளைஞர் பாடிய பாடலைக் கேட்ட இசையமைப்பாளர் டி இமான் பாட வாய்ப்பு தருவதாக தெரிவித்துள்ளார்.

சிறியவர்கள் முதல் பெரியவரிகள் வரை தங்களின் திறமைகளை வெளிப்படுத்த ஒரு சிறந்த வாய்ப்பாக சமூகவலைத்தளம் உள்ளது. சமூகவலைத்தளத்தில் பயனற்ற விஷயங்கள் அதிகளவு இருந்தாலும், பலருக்கு வாழ்க்கை அளித்த தளமாக சமூகவலைத்தளம் விளங்குகிறது.

அந்த வரிசையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த பார்வையற்ற திருமூர்த்தி என்பவர் விஸ்வாசம் படத்தில் இடம் பெற்ற “கண்ணான கண்ணே” …என்ற பாடலைப் பாடி, அதே பகுதியை சேர்ந்த அஜித் மதன் என்பவரின் டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ 24 மணி நேரத்திற்குள் 3 லட்சத்திற்கும் மேலான பார்வையாளர்கள் மனதை கவர்ந்துள்ளது. இதனை தொடர்ந்து விஸ்வாசம் படத்திற்கு இசையமைத்த இமான் இந்த வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு திருமூர்த்தியின் தொடர்பு எண்ணைக் கேட்டுள்ளார். மேலும் சீக்கிரமே படத்தில் பாட வாய்ப்பு அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

 

Exit mobile version