சட்ட விரோதமாக 900 மதுபாட்டில்கள் காரில் கடத்தி விற்பனை

ராமேஸ்வரத்தில் சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்காக காரில் கடத்தி வரப்பட்ட 900 மதுபாட்டில்களை தனிப்பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 3 பேரை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் நீதிமன்ற உத்தரவுப்படி மதுபானக் கடைகள் அகற்றப்பட்டன. இதனைப் பயன்படுத்தி சில சமூகவிரோத கும்பல் சட்டவிரோதமாக காரில் மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் லெட்சுமணன் தலைமையில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. ஆத்திக்காடு அருகே சந்தேகத்திற்கிடமாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டபோது அதில் 900 மதுபாட்டில்கள் கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது. இதுதொடர்பாக 3 பேரைபிடித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

 

Exit mobile version