அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறியவர்கள் வெளியேற்றப்படுவார்கள்: டிரம்ப்

அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறியவர்கள் விரைவில் வெளியேற்றப்படுவார்கள் என்று அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறியவர்கள் பிரச்சினையை டிரம்ப் தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளதாக வெள்ளை மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கையை அவர் விரைவில் தொடங்க இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது. பல ஆண்டுகளாக சட்டவிரோதமாக குடியேறிய மக்களைத்தான் வெளியேற்ற இருப்பதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்தநிலையில், புலம் பெயர்ந்தோர் உரிமை குழுக்கள் டிரம்பின் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த பொதுவான அச்சுறுத்தல் சமூகங்களுக்கும், அமெரிக்க பொருளாதாரத்துக்கும் கேடு விளைவிக்கும் என்று குறிப்பிட்டுள்ளன.

Exit mobile version