ஐ.ஐ.டியின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க சென்னை வந்தார் மோடி

ஒரு நாள் பயணமாக சென்னை வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

சென்னை ஐ.ஐ.டி. பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி வருகை தந்துள்ளார். விமான நிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆளுநர் பன்வாரிலால், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் சால்வை அணிவித்தும், பூங்கொத்து கொடுத்தும் வரவேற்றனர். அதைத்தொடர்ந்து அமைச்சர்கள், உயர் அதிகாரிகளும் பிரதமருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

Exit mobile version