ஐஐடி மாணவி தற்கொலை: மூன்று பேராசிரியர்களுக்கு மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் சம்மன்

சென்னை, ஐஐடி மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் ஐஐடி பேராசிரியர்கள் மூன்று பேருக்கு மத்திய குற்றபிரிவு காவல்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர்.

சென்னை ஐஐடியில் முதலாமாண்டு படித்து வந்த கேரள மாநிலத்தை சேர்ந்த மாணவி பாத்திமா லத்தீப் தூக்கிட்டு தற்கொலை செய்து கொணடார். இந்த வழக்கை தமிழக காவால்துறையினர் விசாரித்து வந்த நிலையில் பின்னர், மத்திய குற்றப்பிரிவு காவல்துறைக்கு மாற்றினர். இதனை தொடர்ந்து மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை விவகாரம் குறித்து ஐஐடி பேராசிரியர்கள் சுதர்சனம் பத்மநாபன், மிலின்த், ஹேமசந்திரன் ஆகிய 3 பேருக்கு மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் இன்று ஆஜராகும் படி சம்மன் அனுப்பியுள்ளனர்.

Exit mobile version