சபரிமலைக்கு பெண்கள் வந்தால் செத்துருவோம்- சிவசேனா உறுப்பினர் மிரட்டல்

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் பெண்கள் நுழைய முயற்சித்தால் கூட்டம் கூட்டமாகத் தற்கொலை செய்து கொள்வோம் என்று சிவசேனா கட்சியை சேர்ந்த பெரிங்கமாலா அஜி எச்சரித்துள்ளார்.

திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சபரிமலை வரும் பெண்களை தடுப்பதற்காக 7 பேர் கொண்ட தற்கொலை படையை முதற்கட்டமாக உருவாக்கியுள்ளதாக அவர் தெரிவித்தார். பெண்கள் சபரிமலைக்குள் நுழைந்தால், அந்த 7 பேரும் உடனடியாக தங்களின் உயிரை மாய்த்துக்கொள்வார்கள் என அவர் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version