தேர்தலை தள்ளி வைக்க தமிழக அரசு கேட்டுக்கொண்டால் பரிசீலிக்கப்படும் – தலைமை தேர்தல் ஆணையர்

டெல்லியில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், கஜா புயல் காரணமாக தமிழகத்தில் உள்ள 20 தொகுதிகளிலும் தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை வைக்கவில்லை என கூறினார். இதற்காக தமிழக அரசு கடிதம் எழுதினால் தேர்தலை தள்ளி வைப்பது குறித்து பரிசீலிப்படும் என்று கூறிய அவர். புயல் சீரமைப்பு பணிகள் நிறைவடைந்ததும் இடைத்தேர்தல் நடத்தப்படும் என ஓ.பி.ராவத் தெரிவித்தார். தேர்தலை தள்ளி வைக்கும்படி கடிதம் எழுதவில்லை என்றாலும், தமிழக அரசிடம் கருத்து கேட்ட பிறகு, தேர்தல் ஆணையம் தனது முடிவை அறிவிக்கும் என அவர் கூறினார்.

Exit mobile version