சமுதாயம் ஒன்றுப்பட்டால் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கலாம்

சமுதாயம் ஒன்றாக இணைந்தால் தான் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க முடியும் என லதா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

கோவை பந்தயசாலை பகுதியில் உள்ள தனியார் விடுதியில் பீஸ் ஃபார் சில்ட்ரன் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய லதா ரஜினி காந்த், தமிழ்நாட்டில் 32 மாவட்டங்களில் இவ்வமைப்பு ஆரம்பிக்க உள்ளதாகவும், சமூக ஆர்வலர்கள் தங்களுடன் இணைந்து பணியாற்றலாம் என அழைப்பு விடுத்துள்ளார். இந்நிகழ்ச்சியில் மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

Exit mobile version