காஷ்மீர் மக்கள் மீது தாக்குதல் நடைபெற்றால் கடும் நடவடிக்கை

காஷ்மீர் மக்கள் மீது தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்றால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார்.

உத்தர பிரதேசத்தில் உள்ள கான்பூர், வாரணாசி மற்றும் காசியாபாத் ஆகிய இடங்களில் 30 ஆயிரம் கோடிக்கு மெட்ரோ ரயில் திட்டம், காசி விஸ்வநாதர் ஆலயத்திற்கு பிரம்மாண்ட சாலை மற்றும் அணுமின் நிலைய அடிக்கல் நாட்டு விழா என பல்வேறு நலத்திட்ட பணிகளை மோடி தொடங்கி வைத்தார். அதன்பின் பேசிய நரேந்திர மோடி, உத்தர பிரதேசத்தில் காஷ்மீரைச் சேர்ந்த இருவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மிகவும் கண்டனத்திற்குரியது எனத் தெரிவித்தார். இதுபோல் மற்றொரு சம்பவம் நடைபெறக்கூடாது என்றும், காஷ்மீர் மக்கள் மீது தாக்குதல் நடத்தினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மோடி தெரிவித்தார். இது குறித்து அந்தந்த மாநில முதலவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

Exit mobile version