மோடி வெற்றிபெற்றால் இந்தியாவுடன் சமாதான பேச்சு நடத்த வாய்ப்பு

மக்களவை தேர்தலில் மோடி வெற்றி பெற்றால் இந்தியாவுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பு உள்ளதாக, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார். இந்தியாவில் நடைபெறும் மக்களவை தேர்தல் குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், வலதுசாரி கட்சியான பாஜக வெற்றி பெற்றால், காஷ்மீரில் சில வகையான தீர்வு கிடைக்கும் என்றும், காங்கிரஸ் கட்சியின் தலைமையில் ஆட்சி அமைந்தால் பாகிஸ்தானுடன் பேசுவதற்கு பயப்படலாம் என்றும் தெரிவித்தார்.

பிரதமர் மோடி தேசியவாத உணர்வு அடிப்படையில் தேர்தல் பிரசாரம் செய்வதாக குறிப்பிட்ட இம்ரான் கான், காஷ்மீரில் அரசியல் போராட்டம் மற்றும் ராணுவத்தால் தீர்வு கிடைக்காது என்றார்.

Exit mobile version