பாகிஸ்தானின் வலிமையை குறைத்து எடைபோட வேண்டாம் – ஆசிப் காபூர்

இந்தியா ஒரு துல்லிய தாக்குதல் நடத்தினால், பதிலுக்கு 10 தாக்குதல் நடத்தப்படும் என பாகிஸ்தான் எச்சரித்துள்ளது.

பாகிஸ்தான் ராணுவத் தளபதி குவாமர் ஜாவித் பஜ்வா இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். அவருடன் சென்றுள்ள ராணுவ மக்கள் தொடர்பு அதிகாரியான ஆசிப் காபூர் லண்டனில் செய்தியாளர்களிடம் பேசினார்.

பாகிஸ்தான் மீது இந்தியா ஒரு முறை துல்லிய தாக்குதல் நடத்தினால், பதிலுக்கு 10 துல்லிய தாக்குதல்கள் நடத்தப்படும் என்று அவர் கூறினார்.

பாகிஸ்தானுக்கு எதிராக செயல்படலாம் என நினைப்பவர்கள், தங்கள் வலிமையை குறைத்து எடை போட வேண்டாம் என்று அவர் எச்சரித்தார்.

Exit mobile version