திமுக 100 திட்டங்களை அறிவித்தால், 99 திட்டங்கள் அமலுக்கு வராது : அமைச்சர் சி.வி.சண்முகம்

திமுக ஆட்சியின் போது 100 திட்டங்களை அறிவித்தால், அதில் 99 திட்டங்கள் நடைமுறைக்கே வராது என்று சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் விமர்சித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகேயுள்ள கீழத்தாழனூரில், அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கும் விழா நடைபெற்றது. இதில், சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் கிரான்குரலா, உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் குமரகுரு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் 407 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு, பொங்கல் சிறப்பு பரிசுத் தொகுப்புடன், ஆயிரம் ரூபாய் ரொக்கத்தை, அமைச்சர் சி.வி.சண்முகம் வழங்கினார். முன்னதாக விழாவில் பேசிய அவர், திமுக ஆட்சியின்போது 100 திட்டங்கள் அறிவிக்கப்பட்டால், அதில் 99 திட்டங்கள் நடைமுறைக்கே வராது என்று விமர்சித்தார்.

Exit mobile version