அதிமுகவின் வலுவான கூட்டணியால் திகைத்துப் போயுள்ள ஸ்டாலின்

நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் வலுவான கூட்டணி அமைந்துள்ளதால் திமுக தலைவர் ஸ்டாலின் என்ன செய்வது என்று திகைத்து போயுள்ளதாக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள மைலம்பாடி பகுதிகளில் ரூபாய் 4கோடியே 50 லட்சம் மதிப்பில் வளர்ச்சிப் பணிகளுக்கான பூமி பூஜையில் அவர் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி அளித்த அமைச்சர் கருப்பணன், நடைபெற உள்ள தேர்தல்களில் அதிமுக அமோக வெற்றி பெறும் என்று உறுதிபட தெரிவித்தார்.

Exit mobile version