புல்வாமா தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட வாகனம் அடையாளம் கண்டுபிடிப்பு

புல்வாமா தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட வாகனத்தை தேசிய புலனாய்வு பிரிவினர் அடையாளம் கண்டுள்ளனர்.

காஷ்மீரின் புல்வாமா பகுதியில் ராணுவத்தினர் சென்ற வாகனம் மீது வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட வாகனத்தை மோதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 வீரர்கள் உயிர் நீத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் தேசிய புலனாய்வு பிரிவினர், தாக்குதலுக்கு பயன்படுத்திய காரை அடையாளம் கண்டுள்ளனர். தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டது மாருதி இகோ வகை கார் என்பதும் சாஜ்ஜத் பாத் என்பவருக்கு சொந்தமானது என்பதும் தெரியவந்துள்ளது. கைது நடவடிக்கையில் இருந்து தப்பிப்பதற்காக தற்போது அவர் தலைமறைவாக உள்ளதாகவும், ஜெய்ஷ் இ முகமது அமைப்பில் இணைந்துவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது

Exit mobile version