டி20 உலக கோப்பை குறித்து ஐ.சி.சி. இன்று இறுதி முடிவு!!

ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள இருபது ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி குறித்து ஐசிசி இன்று இறுதி முடிவை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இருபது ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை வரும் அக்டோபர் 18 முதல் நவம்பர் 15-ஆம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில், கொரோனா தாக்கம் காரணமாக, இந்த தொடர் நடைமுறைக்கு சாத்தியமில்லை என்று ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் அறிவித்திருந்தது. இந்நிலையில், ஐசிசி உறுப்பினர்களின் கூட்டம் காணொலி காட்சி மூலம் இன்று நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் 20 ஓவர் உலகக் கோப்பை குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version