ஐந்தாம் கட்ட அகழ்வாராய்ச்சிப் பணியை பர்வையிட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்

கீழடியில் நடைபெறும் 5-ம் கட்ட அகழ்வாராய்ச்சிப் பணியை ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பார்வையிட்டனர்.

சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்று வரும் இந்த பணிகளை நாள்தோறும் ஏராளமானோர் பார்வையிட்டு செல்கின்றனர். இந்தநிலையில், டெல்லியில் இருந்து வந்த 11 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் கொண்ட குழுவினர் கீழடியில் ஆய்வு செய்தனர். சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக பார்வையிட்டு, ஒவ்வொரு பொருட்கள் குறித்தும் ஆர்வத்துடன் கேட்டறிந்தனர். கடந்த சில நாட்களாகவே கீழடிக்கு வரும் பார்வைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version