கீழடி உள்பட 4 இடங்களில் அகழ்வாய்வு பணிகளுக்கு அனுமதி: மத்திய அரசு

தமிழ்நாட்டில், கீழடி உட்பட தமிழ்நாட்டின் நான்கு இடங்களில் அகழ்வாய்வு பணிகளை மேற்கொள்ள, மத்திய அரசு ஒப்புதல் அளித்து, அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த அனுமதி அடுத்தாண்டு, செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி வரை நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி, தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகளை, ஈரோடு மாவட்டம் பெருந்துறை தாலுகாவிற்கு உட்பட கொடுமணல் ஆகிய ஊர்களில், அகழ்வாய்வு பணிகளை மேற்கொள்ள, அடுத்தாண்டு, செப்டம்பர் வரை அனுமதி அளித்து மத்திய அரசு அறிவிக்கை வெளியிட்டிருக்கிறது.

Exit mobile version