நான் காங்கிரசை விமர்சிக்க கூடியவன் – டி.கே ரெங்கராஜன்

ப.சிதம்பரம் ஒரு பிடிவாதக்காரர் என்றும், சிவகங்கை தொகுதி வளர்ச்சி பெறாமல் இருப்பதற்கு அவரை காரணம் எனவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் டி.கே.ரெங்கராஜன் தெரிவித்து இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் டி.கே.ரெங்கராஜன் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். தான் வழக்கமாக காங்கிரசை விமர்சிக்க கூடியவன் என்று கூறிய அவர், சிதம்பரம் பிடிவாதக்காரர் எனக் குற்றம் சாட்டினார். சிவகங்கை தொகுதி வளர்ச்சி பெறாமல் இருப்பதற்கு சிதம்பரமே காரணம் என்றும் அவர் சாடினார். 16 ஆண்டுகளாக வருமான வரி கட்டியதில்லை எனக் கூறிய ரங்கராஜன், சாகும் வரை வரி செலுத்தப் போவதும் இல்லை என பேசியது கூட்டத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. காங்கிரஸ் கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சியினர் விமர்சனங்களை முன்வைத்து பேசியது. மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version