நிதி நெருக்கடியில் 81 கோடியில் பேனா நினைவு சின்னம் தேவைதானா? – கூட்டணியில் இருக்கும் மார்க்.கம்யூனிஸ்ட் மாநிலத் தலைவர் விளாசல்!

சேலத்தில் திமுக கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், கருணாநிதிக்கு பேனா நினைவு சின்னம் அமைப்பது அவசியமான ஒன்று என்றாலும், அதில் ஒரு சர்ச்சை எழுந்தால் அது காலத்திற்கும் பேசப்படும் என்று தெரிவித்தார். மேலும் தமிழக அரசு நிதி நெருக்கடியில் உள்ள சூழலில் 81 கோடி ரூபாய் செலவில் கடலில் கருணாநிதிக்கு பேனா நினைவு சின்னம் அமைப்பது தேவைதானா என்று திமுக கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார். இதனால் திமுக கூட்டணி கட்சிகளுக்கிடையே விரிசல் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளதால் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version