பஸ்சில் தொங்கியபடி சாகச பயணம்!

பாளையங்கோட்டையில் காலை மற்றும் மாலை நேரங்களில் மாணவர்கள் பயணிக்க கூடுதலாக அரசு பேருந்துகளை இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். பல்வேறு பகுதிகளில் இருந்து பாளையங்கோட்டைக்கு ஏராளமானோர் வருகை புரிவதால் காலை மற்றும் மாலை நேரங்களில் அரசு பேருந்துகளில் எப்போதும் கூட்டமாகவே காணப்படுகிறது. இதன் காரணமாக மாணவர்கள் படிக்கட்டில் தொங்கிய படி ஆபத்தான முறையில் பயணம் மேற்கொள்கின்றனர். உயிரிழப்பு, காயம் போன்ற அசம்பாவிதங்கள் ஏற்படும் முன்னர் பாளையங்கோட்டையில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version