தமிழகத்திற்கும், தெலங்கானாவிற்கும் பாலமாக இருப்பேன்- தமிழிசை சவுந்தரராஜன்

தமிழகத்திற்கும், தெலங்கானாவிற்கும் பாலமாக இருக்கப்போவதாகத் தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை தேனாம்பேட்டையில், தமிழ் கலாச்சார சங்கம் சார்பில் நடைபெற்ற மெகா இசை விழாவில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன் ஆகியோர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டனர். விழாவில் பேசிய தமிழிசை சவுந்தரராஜன், ஆன்மீகத்தையும் தமிழையும் பிரிக்க முடியாது என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர், தமிழ் மொழி தான் ஆன்மீகத்தை வளர்த்தது என்று கூறினார்.

நிகழ்ச்சியில் பேசிய தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன், தமிழ் மொழி எந்தளவு பரவியுள்ளதோ அதே அளவு தமிழ் பண் உலக அளவில் பரவியுள்ளதாக தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அமைச்சர், தமிழ் பண் தான் கர்நாடக இசைக்கு அடிதளமாக அமைந்தது என்று கூறினார்.

Exit mobile version