அப்போதுதான் நடிகர் அஜித்தை பற்றி தெரிந்து கொண்டேன்: பிருத்விராஜ்

மலையாளத்தில் முன்னணி நடிகராக திகழ்பவர் பிரித்விராஜ், அஜித்திடமிருந்து இதை கற்றுக் கொண்டதாக தெரிவித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய திரைப்படங்களில் நடித்து வருபவர் பிரித்விராஜ். தமிழில் கனா கண்டேன், பாரிஜாதம், மொழி வெள்ளித்திரை, நினைத்தாலே இனிக்கும் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர் சமீபத்தில் சுபநிகழ்ச்சி நிகழ்ச்சியில் நடிகர் அஜித்தை சந்தித்து பிரித்விராஜ் கலந்து உரையாடியுள்ளார். அப்போதுதான், அஜித்தைப் பற்றி  பிரித்விராஜ் தெரிந்து கொண்டதாக தெரிவித்துள்ளார். அதில் திரைத்துறையில் வரும் வெற்றி தோல்வியில் இருந்து அஜித் விலகி இருப்பவர் என்றும் அவரது பெரிய படங்கள் வெற்றி பெற்றாலும் சந்தோஷம் இருக்காது தோல்வியடைந்தாலும் வருத்தப்பட மாட்டார் எனவும் கூறி, இதனை தன் வாழ்வில் பிரித்விராஜ் பின்பற்றுவதாக தெரிவித்துள்ளார்.

மலையாள சினிமாவில் இந்த ஆண்டு பிளாக்பஸ்டர் படமென்றால் பிரித்விராஜ், மோகன்லால் நடித்து இயக்கிய படம் “லூசிபர்”. இந்த படம் சுமார் 200 கோடி வரை வசூல் ஈட்டியது. மேலும் இந்த படத்தின் இரண்டாம் பாகம் “எம்பிரான்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் ஷூட்டிங் அடுத்த வார இறுதியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version