ஐ.எஸ்.எல். கால்பந்து: கவுகாத்தியை வீழ்த்தி ஆறுதல் வெற்றி பெற்றது ஐதராபாத்

கவுகாத்தியில் நடைபெற்ற ஐ.எஸ்.எல். கால்பந்து லீக் போட்டியில் கவுகாத்தி அணியை 5-1 என்ற கணக்கில் வீழ்த்தியது கேரளா அணி.

10 அணிகள் இடையிலான 6-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. அசாம் மாநிலம் கவுகாத்தியில் நேற்று  இரவு நடந்த லீக் ஆட்டத்தில் நார்த்ஈஸ்ட் யுனைடெட் எப்.சி, ஐதராபாத் எப்.சி. அணிகள் மோதின. ஆட்டத்தின் முதல் பாதியில் 11, 13, 40வது நிமிடங்களில் ஐதராபாத் அணி தலா ஒரு கோல் அடித்தது. ஆனால், கவுகாத்தி அணி 35-வது நிமிடத்தில் ஒரு கோல் மட்டுமே அடித்தது. இதனால் முதல் பாதி முடிவில் ஐதராபாத் அணி 3-1 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.

இரண்டாவது பாதியின் 55, 88-வது நிமிடங்களில் ஐதராபாத் அணியினர் தலா ஒரு கோல் அடித்து சிறப்பாக ஆடியது. இறுதியில், ஐதராபாத் அணி 5-1 என்ற கணக்கில் கவுகாத்தி அணியை வீழ்த்தியது. இதன்மூலம் ஐதராபாத் அணி தனது 2-வது வெற்றியை பதிவு செய்தது. ஐதராபாத் அணி தாங்கள் விளையாடிய 18 போட்டிகள் 2 வெற்றி, 12 தோல்வி, 4 டிரா என மொத்தம் 10 புள்ளிகள் பெற்று கடைசி இடம் பிடித்துள்ளது.

Exit mobile version