ஐ.எஸ்.எல் கால்பந்து இறுதிப்போட்டியில் சென்னை – கொல்கத்தா அணிகள் இன்று மோதல்

6-வது ஐ.எஸ்.எல் கால்பந்து தொடரின் இறுதி போட்டியில் சென்னையின் எப்.சி அணியும் – அட்லெடிகோ டி கொல்கத்தா அணியும் இன்று மோதுகின்றன.

கோவா அணியை வீழ்த்தி சென்னை அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இதே போல் பெங்களூரு அணியை வீழ்த்தி கொல்கத்தா அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்நிலையில் சென்னை – கொல்கத்தா அணிகள் மோதும் இறுதிப்போட்டி கோவாவில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது.

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக மைதானத்திற்கு பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2 முறை சாம்பியன் பட்டம் பெற்ற இவ்விரு அணிகளும் மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வெல்ல தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டனர்.

Exit mobile version