வீட்டு செலவுக்கு பணம் கேட்ட மனைவியின் கழுத்தை பிளேடால் அறுத்த கணவன்

சென்னை கொளத்தூரில் வீட்டு செலவுக்கு பணம் கேட்ட மனைவியின் கழுத்தை பிளேடால் அறுத்த கணவனை காவல் துறையினர் கைது செய்தனர்.

சென்னை கொளத்தூர் ஜி.கே.எம் காலனி 6வது தெருவில் வசித்து வரும் சக்கரையா – பத்மினி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்தநிலையில், சக்கரையாவிடம் வீட்டு செலவிற்கு அவரது மனைவி பத்மினி பணம் கேட்டதாக கூறப்படுகிறது. அப்போது குடிபோதையில் இருந்த சக்கரையா மனைவியின் கழுத்தை பிளேடால் அறுத்துவிட்டு தலைமறைவானார். பின்னர் ரத்த காயங்களுடன் போராடிய பத்மினியை அக்கம்பத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் தலைமறைவாக உள்ள சக்கரையாவை தேடி வந்தநிலையில், பெரம்பூர் லோகோ ரயில் நிலையம் அருகில் அவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

Exit mobile version