புதுவையில் கட்டிய மனைவியின் கழுத்தை அறுத்த கணவன்!

புதுச்சேரியில் கட்டிய மனைவியின் கழுத்தை அறுத்த அரசு பள்ளி ஆசிரியரை போலீசார் கைது செய்தனர். மனைவி மீது ஏற்பட்ட சந்தேகத்தால் கொலை செய்ததாக ஆசிரியர் வாக்குமூலம் கொடுத்திருப்பது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

புதுச்சேரி முதலியார்பேட்டை வேல்ராம்பட்டு பகுதியை சேர்ந்தவர் 58 வயதான விஜயன். இவர் அரசு பள்ளி ஆசிரியர். இவரது மனைவி 52 வயதான சாந்தியும், தனியார் பள்ளி ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இந்த தம்பதியினருக்கு கல்லூரி படிக்கும் ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர்…

60 வயதை நெருங்கும் விஜயனுக்கு காலம்போன காலத்தில் மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. கவுரவமாக சென்ற ஆசிரியர் குடும்பத்தில் சந்தேக பேயின் ஆட்டம் ஆரம்பித்தது… மனைவி எங்கு சென்றாலும், யாரிடம் பழகினாலும் விஜயனின் சந்தேக கண்கள் அவரை பின்தொடர்ந்தது… ஒருகட்டத்தில் சந்தேகம் சண்டையாகவும் மாறியுள்ளது. மறுநாள் காலை நாம் வெளி உலகத்தை பார்க்கப்போவது இல்லை என்று தெரியாத சாந்தி கடந்த 3 ஆம் தேதி இரவு உறங்கச்சென்றார். உறங்கிக்கொண்டிருந்த சாந்தியை பார்த்த விஜயன், மனைவிக்கு நிரந்தர உறக்கத்தை கொடுத்தால் தான் நமக்கு நிம்மதி என்று நினைத்தார்.

உறங்கி கொண்டிருந்த சாந்தியின் கை, கால்களை கட்டி வீட்டில் இருந்த கத்தியால் சாந்தியின் கழுத்தை அறுக்க தொடங்கினார், ஐம்பது வயதை தாண்டிய ஆபத்தான கணவன்… அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வருவதற்குள் சாந்தியின் கழுத்திற்குள் கத்தி பாய்ந்தது…

ஆசையாய் வருடிய கையாலேயே, மனைவியின் கழுத்தை கரகரவென்று அறுத்து கொலை செய்தார் விஜயன்… சம்பவ இடத்திலேயே சாந்தி மரணம் அடைய, கொலைக்கு பயன்படுத்திய கத்தியுடன் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார் விஜயன்.

அவர் கொடுத்த தகவலை அடுத்து சாந்தியின் உடலை கைப்பற்றிய முதலியார்பேட்டை போலீசார் பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 60 ஆம் கல்யாணம் செய்ய வேண்டிய வயதில் இருக்கும் ஆசிரியர் தம்பதியர் வாழ்வில் சந்தேகம் என்ற சூறாவளி வீசி குடும்பத்தை சிதைத்தது…

Exit mobile version