சென்னையில் மனைவியை கொலை செய்து விட்டு கணவன் தற்கொலை

பூந்தமல்லி அருகே நடத்தையில் ஏற்பட்ட சந்தேகம் காரணமாக மனைவியை கொலை செய்து விட்டு கணவனும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது…

பூந்தமல்லி, பாப்பான் சத்திரம், பாரதியார் தெருவைச் சேர்ந்தவர் மாரி(என்ற) மாரிமுத்து வயது 60, இவர் அதே பகுதியில் உள்ள தனியார் கல்லூரிக்கு சொந்தமான தோட்டத்தை கவனித்து கொள்ளும் வேலை செய்துவந்தார். இவரது மனைவி ரேவதி கடந்த 7ஆம் தேதி இரவு முழுவதும் வீடு திரும்பவில்லை என்று கூறப்படுகிறது இதனால் சந்தேகம் அடைந்த அவரது மகன்கள் மதியம் தாய் வேலை செய்த தோட்டத்திற்கு சென்று பார்த்தபோது தோட்டத்திற்குள் உள்ள மரத்தில் தந்தை மாரி தூக்குப்போட்டு இறந்த நிலையில் சிறிது தூரத்தில் தாய் ரேவதி தலையில் காயங்களுடன் வேட்டியால் கழுத்து இறுக்கப்பட்டு இறந்து கிடந்தார். இதனை கண்ட அவரது மகன்கள் அதிர்ச்சியில் உறைந்து போயினர்.

இதுகுறித்து நசரத்பேட்டை காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது தகவல் அறிந்ததும் சம்பவ வந்த காவல்துறையினர் இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்திருக்கின்றன மாரி பல வருடங்களாக தோட்டத்தை பார்த்து கொள்ளும் வேலை செய்து அங்கிருக்கும் வீட்டிலேயே தங்கி வந்துள்ளார்.

இந்த நிலையில் மனைவியின் நடத்தையின் மீது மாரிக்கு சந்தேகம் ஏற்பட்டு அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கொலை நடப்பதற்கு முன்பாக கணவன், மனைவி இடையே வழக்கம்போல் தகராறு ஏற்பட்டது இதனால் ஆத்திரமடைந்த மாரி தனது மனைவியை கட்டையால் அடித்து தாக்கியுள்ளார் அவரிடம் இருந்து தப்பிக்க ரேவதி அந்த தோட்டத்தின் வழியாக சிறிது தூரம் ஓடியும் அவரை விடாமல் விரட்டிச் சென்று சரமாரியாக தாக்கி தான் அணிந்திருந்த வேட்டியைக் கழற்றி ரேவதியின் கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளார்.

அதன்பிறகு அந்த தோட்டத்தில் உள்ள மரத்தில் மாரி தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டிருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. நடத்தையில் சந்தேகபட்டு மனைவியை கொலை செய்து கணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Exit mobile version