குடும்ப தகராறில் மனைவியை அரிவாளால் வெட்டிய கணவன்

முதுகுளத்தூர் அருகே குடும்ப தகராறில் மனைவியை அரிவாளால் வெட்டி விட்டு தலைமறைவான கணவனை காவல்துறையினர் தேடிவருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் புளியங்குடி கிராமத்தைச் சேர்ந்த சசிக்குமார், சத்தியா தம்பதிக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இருவருக்கும் இடையே ஏற்பட்ட குடும்ப தகராறில் வாக்குவாதம் நீடித்தது. இதனால் ஆத்திரமடைந்த சசிக்குமார், சத்யாவை அரிவாளால் வெட்டியுள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த சத்யா, சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருவதோடு, தலைமறைவான சசிக்குமாரை தெடி வருகின்றனர்.

Exit mobile version