விஷப்பாம்பு ஏவி மனைவியை கொலை செய்த கணவன் கைது!!!

கேரள மாநிலம் கொல்லத்தில் பாம்பை ஏவி, மனைவியை கொலை செய்த கணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கொல்லம் மாவட்டம் அஞ்சல் பகுதியை சேர்ந்த சூரஜ் என்பவரது மனைவி உத்ரா, கடந்த மே 6ஆம் தேதி பாம்புக் கடித்து உயிரிழந்துள்ளார். உத்ராவின் மரணத்தில் சந்தேகம் அடைந்த அவரது தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, உத்ராவின் கணவர் சூரஜிடம் விசாரணை நடத்தினர். இதில், ஏற்கனவே ஒரு முறை, 15 ஆயிரம் ரூபாய் கொடுத்து, விஷப்பாம்பை வாங்கி வந்து மனைவி உத்ராவை கொல்ல முயன்றதாக தெரிவித்தார். அப்போது உத்ரா உயிர் தப்பியதால், இரண்டாவது முறையாக 10 ஆயிரம் ரூபாய் கொடுத்து விஷப்பாம்பு வாங்கி வந்து மனைவியை கொன்றதை ஒப்புக்கொண்டார். மனைவியின் சொத்துக்கு ஆசைப்பட்டும், இரண்டாவது திருமணம் செய்து கொள்வதற்காகவும் சூரஜ் திட்டமிட்டது விசாரணையில் அம்பலமானது. இதையடுத்து, சூரஜையும், அவருக்கு பாம்புகளை விற்றவரையும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Exit mobile version