பல்லடம் குற்றவியல் நீதிமன்றத்தில் கணவன், மனைவி தற்கொலை முயற்சி: போலீசார் கைது

அணுப்பட்டி பகுதியில் உள்ள னியார் ரேடியேட்டர் கம்பெனியில் ரேடியேட்டரை திருடியதாக மதுரையை சேர்ந்த கருப்பசாமியை போலீசார் கைது செய்தனர். நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்த கருப்பசாமி காவல் நிலையத்தில் கையெழுத்திடாமலும், நீதிமன்றத்தில் ஆஜராகாமலும் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் பல்லடம் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி பிடிவாரண்ட் பிறப்பித்தார். கருப்பசாமி நீதிமன்றத்தில் ஆஜராக வந்தபோது வாரண்ட் ரீ கால் ஆகாமல் தாமதம் ஏற்பட்டதால், பிளேடால் கழுத்தை அறுத்துக் கொண்ட நிலையில், மனைவியும் தனது கையை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இருவரையும் மீட்ட போலீசார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

Exit mobile version