வடமாநில தொழிலார்களை கண்டித்து தென்னை சார்ந்த தொழிலாளர்கள் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகை!

உடுமலைப்பகுதியில் தென்னை சார்ந்த பிரதான பணிகளில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக வட மாநில தொழிலாளர்கள் அதிக அளவில் குறைந்த சம்பளத்தில் வேலை பார்த்து வருவதால் தமிழக தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழக தென்னை தொழிலாளர்களுக்கு ஊதியம் நிர்ணயம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய் கோட்டாட்சியளர் அலுவலரை முற்றுகையிட்டு கோரிக்கை மனு வழங்கினர்.

Exit mobile version